பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை

பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை

சீரற்ற வானிலை காரணமாக கலடுவாவ வலய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

இதனால் இன்று (04) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாதுக்கை, கொடகம, ஹோமாகமை, பன்னிப்பிட்டிய, மஹரகம, ருக்மல்கம, பெலன்வத்த, பொரலஸ்கமுவ, பெபிலியான, கலகெதர ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனைய தரப்பினரின் உதவியுடன் வெடிப்பு ஏற்பட்ட பிரதான நீர்க்குழாயை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )