![பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் மீட்பு பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் மீட்பு](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/image-139.png)
பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் மீட்பு
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு வியாபார நிலையத்தில் நேற்று (11) திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ. வாஸீத் அஹமட் உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ்.ஜீவராஜா அவர்களால் பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தமது கடமையும், பொறுப்பும் ஆகும் என்ற அடிப்படையில் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்களும் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் இலக்கங்களூடாக அறியத்தருமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
நூருல் ஹுதா உமர்