உயிரிழந்த மீனவர்களின் இறுதி செல்ஃபி

உயிரிழந்த மீனவர்களின் இறுதி செல்ஃபி

தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘டெவோன் 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ​​கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் எனக் கருதி அருந்தியுள்ளனர்.  அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் படகில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், போத்தலுடன் உயிரிழந்த மீனவர்களும், தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )