இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்

இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்

2024 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் , நாணய சலுலர்ச்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் பெதும் நிஸ்சங்க அதிகபட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றார்.

முஸ்தாபிசுர் ரஹ்மான், ரிஷாத் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து , 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் டவ்ஹித் ஹ்ரிடோய் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் நுவான் துஷார நான்கு விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )