ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை நியமிக்க திருமலை உள்ளூராட்சி உறுப்பினர்கள் தீர்மானம் !

ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை நியமிக்க திருமலை உள்ளூராட்சி உறுப்பினர்கள் தீர்மானம் !

திருககோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டுமென தீர்மானித்துள்ளனர்.

கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் என்ற வகையில், அந்த செய்தியை கட்சிக்கும் தெரிவிக்குமாறு அமைச்சர் கலாநிதி பந்துல குணவத்தனவிடம் கேட்டுக்கொள்கிறோமென முன்னாள் மொரவெவ பிரதேச சபைத் தலைவர் ஜகத் குமார தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் கார்பட் செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட திருககோணமலை மாவட்டத்தின் மொறவெவ விமானப்படைத் தளத்துக்கான வீதியை மக்கள் வசம் ஒப்படைக்கும் நிகழ்வு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரால் திருகோணமலை
மாவட்டத்தில் முதன் முதலாக வீதியை திறந்து வைக்கும் வாய்ப்பு மொறவெவ பிரதேசத்துக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் எமது பிரதேசத்துக்கு இத்திட்டம் வழங்கப்பட்டது, ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டத்தினால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன, திருகோணமலை மாவட்டம் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால் இம்மாவட்டத்துக்கான ஒதுக்கீடுகளை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன.

எனவே, ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களை வழங்கும் போது ஆளும் கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதிகளின் முன்மொழிவுகளுக்கு விசேட கவனம் செலுத்தி முன்னுரிமை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )