30 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது

30 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது

கஹதுடுவ பகுதியில் 30 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (09) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் டுபாயில் தலைமறைவாகியுள்ள அஹுங்கல்லே லொகு பட்டி என்பவரின் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வருபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் பதுங்கியிருந்த வீட்டிலிருந்து 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட 2 மகிழுந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )