நளின் பண்டாரவின் வாகனத்தில் மோதுண்ட இளைஞன் உயிரிழப்பு

நளின் பண்டாரவின் வாகனத்தில் மோதுண்ட இளைஞன் உயிரிழப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதி 08 நாட்களாக கொழும்பு  தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று (111) உயிரிழந்துள்ளார்.

திஹாரிய, கல்கெடிஹேன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இந் நிலையில் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து, இளைஞரின் பெற்றோர் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, நேற்றிரவு இளைஞனின் உறுப்புகள் அகற்றப்பட்டு மூன்று பேருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் கடந்த 03 ஆம் திகதி காலை கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில், பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப்பினால் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இச் சம்பவத்தின்  பின்னர், நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )