“ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன”

“ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பத்தொரு வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். 

கட்சி தனக்கு பத்து நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், அந்த நிபந்தனைகளின்படி தான் அனைத்து திட்டங்களையும் தயார் செய்துள்ளதாகவும், அந்த பத்து நிபந்தனைகளின்படி தொழில் வாய்ப்பை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது என்பது குறித்தும் திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர், “நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன.” தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )