பீடிக்காக தந்தையை கொலை செய்த மகன்

பீடிக்காக தந்தையை கொலை செய்த மகன்

பீடிக்காக  தந்தையை கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகியுள்ளது. 

சென்னையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் திங்கட்கிழமை (17) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  இதனால் அவரது மகனே அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.   

இதனையடுத்து  சந்தேகமடைந்த பொலிஸார் மகேந்திரனின் மகன் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில்,  அருண் தனது தந்தையிடம் பீடி தருமாறு கேட்டதும்,  அதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்த நிலையில்,  ஆத்திரமடைந்த அருண் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டு அவரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.  இதனையடுத்து அருணை கைது செய்த பொலிஸார் , அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )