கொஸ்கம பிரதேசத்தில் தன்சலுக்கு சென்ற சிறுமி துஷ்பிரயோகம் !

கொஸ்கம பிரதேசத்தில் தன்சலுக்கு சென்ற சிறுமி துஷ்பிரயோகம் !

தன்சலுக்கு சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பொசன் பௌர்ணமி தினமான நேற்றைய தினம் (21) தனது சித்தியுடன் தன்சலுக்கு சென்றுள்ளார்.

புத்தக கடைக்கு சென்று வருவதாக குறித்த சிறுமி தனது சித்தியிடம் கூறிவிட்டு காதலனை சந்திக்க சென்றுள்ளார்.

காதலனை சந்திக்க சென்ற இடத்தில் குறித்த சிறுமியை காதலன் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஹன்வெல்ல அம்குகம பிரதேசத்தில் உள்ள பாழடைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று தன்னை வன்புணர்வு செய்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நேற்று (21) இரவு சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்த பொலிஸார், பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த ஹங்வெல்ல பொலிஸார் இன்று காலை பிரதான சந்தேக நபரான 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நான்கு சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )