வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் பெய்து வரும் மழைக் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரத்தில் நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் தொடக்கம் இறம்பொடை வரை புகை மூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இவ் வீதியூடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டும் ஒலி எழுப்பியபடியும் பயணிக்கும்படி சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )