விடுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

விடுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் கூட்டுறவு தங்குமிட விடுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தங்குமிடத்திற்கு வந்தாகவும் அந்த இடத்தை விட்டு (22) காலை வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார்

எனினும் இன்று (22) திங்கட்கிழமை காலை வரை அவர் வெளியே வராத காரணத்தால் சந்தேகம் ஏற்பட்டு அறையில் ஜன்னல் பகுதியில் இருந்து பார்த்த போது, குறித்த நபர் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து ஊழியர் ஒருவர் இது குறித்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பனாபிட்டிய கரந்தெனிய பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )