ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட 167 பேர் கைது

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட 167 பேர் கைது

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து ஒன்லைன் மூலம் மோசடி செய்த 30 சீன பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இக்குழுவினர் BITCOIN ஊடாக இணையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்கியிருந்து ஒன்லைனில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருமளவான வெளிநாட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினமும் இவ்வாறான மோசடி தொடர்பாக 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன் பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இவ்வாறான மோசடி தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.மேலும் வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )