வீடியோ எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

வீடியோ எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் தனது ஸ்மார்ட் தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்துள்ளார்.

இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து விசாரணைகள் தொடரப்பட்டு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்த லிந்துலை பொலிஸ் அவரை நேற்று (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

இதன்போது இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )