கிளப் வசந்த கொலை ; 7 சந்தேகநபர்கள் கைது

கிளப் வசந்த கொலை ; 7 சந்தேகநபர்கள் கைது

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அவ்வப்போது 10 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுருகிரியில் உள்ள டெட்டு குத்தும் நிலையத்தின் திங்கட்கிழமை (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்ற வர்த்தகர் உயிரிழந்துள்ளார்.
 
அப்போது அங்கிருந்த பிரபல பாடகி கே. சுஜீவாவின் உதவியாளர் நயனா வசுலவும் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி, சுஜீவா, மற்றுமொரு பெண்ணும் ஆணும்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )