ஐரோப்பிய கால்பந்து கிண்ணம் யாருக்கு ? ஸ்பெயின்- இங்கிலாந்து பலப்பரீட்சை

ஐரோப்பிய கால்பந்து கிண்ணம் யாருக்கு ? ஸ்பெயின்- இங்கிலாந்து பலப்பரீட்சை

17ஆவது ஐரோப்பிய கால்பந்து கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது .

குறித்த போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் இறுதி போட்டிக்கு மோதவுள்ளன.

ஜெர்மனியில் கடந்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகிய இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன.

லீக், நாக் அவுட் மற்றும் கால் இறுதி போட்டி முடிவில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரை இறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும் வீழ்த்தின.

இதன் மூலம் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன.

அதன்படி, 03 முறை சாம்பியனான ஸ்பெயின் (1964, 2008, 2012) ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.

அந்த அணி 4-வது முறையாக கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

ஸ்பெயின் அணியில் அனைத்து பிரிவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் இதுவரை ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தை வென்றதில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முதல் முறையாக முன்னேறியது. இதில் இத்தாலியிடம் தோற்றது.

தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் , ஹூட் பெல்லிங்காம் , சகா, லாட்கிங்ஸ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

இதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )