பியகமவில் போதைப் பொருட்களுடன் கைதான பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி!

பியகமவில் போதைப் பொருட்களுடன் கைதான பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி!

பியகம பகுதியில் பெருமளவிலான போதைப் பொருட்களுடன் கைதான பிரதான சந்தேகநபரை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு மஹர நீதவான் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (26) சுமார் 30 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹேஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப் பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, மேலும் ஒரு தொகை போதைப் பொருளுடன் கைதான குறித்த சந்தேகநபருடன் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )