அரச அச்சக திணைக்களத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

அரச அச்சக திணைக்களத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

அரசாங்க அச்சகத்திணைக்களத்திற்கு நேற்று (29) முதல் விசேட
பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சடிக்கும் பணிகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்தே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்க அச்சக திணைக்களத்தின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் நேற்று (29) அங்குசென்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க அச்சக திணைக்களத்தின் பிரதம அதிகாரி திருமதி கங்கானி
கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )