முல்லைத்தீவில் இரு ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்த சிறுமி !

முல்லைத்தீவில் இரு ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்த சிறுமி !

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் தகாத உறவில் இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்த முள்ளியவளை பகுதியினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமி சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த சிறுமி தகாத உறவு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் காதலன் ஒருவரும், முள்ளியவளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரும் சிறுமியுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய , சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்த 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சிறுமியின் காதலனை முள்ளியவளை பொலிஸார் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )