பொறளையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக மறைந்த இரா. சம்பந்தனின் பூதவுடல் !

பொறளையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக மறைந்த இரா. சம்பந்தனின் பூதவுடல் !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்றைய தினம் (02) கொழும்பில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பொரளையில் உள்ள A.F. Raymond மலர்சாலையில், இன்று காலை 09 மணி முதல் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் (03) பாராளுமன்றில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

நாளை (03) பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )