நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

 இந்த மாதம் 31,017 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி குறித்த மாகாணத்தில் 12,153 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் தங்களது வீட்டுச் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்வதில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )