ரணில் – சஜித்தை இணைக்கும் முயற்சியில்  ஹக்கீம் மற்றும் மனோ

ரணில் – சஜித்தை இணைக்கும் முயற்சியில் ஹக்கீம் மற்றும் மனோ

ஜனாதிபதி ரணிலையும் சஜித்தையும் இணைக்க முயற்சி செய்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம்  தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையக அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரவுஃப் ஹக்கீம்  இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் அவர், ஜனாதிபதி ரணிலையும், எதிர்க்கட்சி தலைவர் சஜித்தையும் ஒன்றாக இணைப்பதில் , தன்னுடன்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தனது நண்பனுமான மனோ கணேசனும் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

பல கட்ட பேச்சு வார்த்தைகளின் பின்னர் இரு தரப்பினரும் ஒத்துழைக்காதா காரணத்தினால் தனது முயற்சியை கைவிட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )