“அன்று நாட்டைக் காக்க திராணியற்றவர்கள் இன்று அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்”

“அன்று நாட்டைக் காக்க திராணியற்றவர்கள் இன்று அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்”

“மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.” என இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நவக்கிரகங்களை போல ஒவ்வொரு பக்கமாக திரும்பி நின்றோம். இன்று அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்திருக்கிறது.

மலையக மக்கள் காணியின்றி தவித்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டதிட்டங்களை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.
அதனால் மலையக மக்களுக்கு வீட்டுரிமையும் காணியுரிமையும் கிடைக்கப்போகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த பொருளாதார நெருக்கடியால் சகல மக்களும் கஷ்டப்பட்டனர்.

இன்று 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே கல்விப் புலமையும், வலுவான சர்வதேச தொடர்புகளும் உள்ளது. அதேபோல் நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு அசுர பலம் கிடைத்திருக்கிறது.

எனவே, மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்று 38 பேருக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை வந்திருக்கிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தபோது அவர்களுக்கு அந்த ஆசை ஏன் வரவில்லை.

அன்று நாட்டை ஏற்றிருந்தால் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடும் என்ற அச்சம் மட்டும் தான் அவர்களிடம் இருந்தனர்.

அதனால் அன்று நாட்டைக் காக்க திராணியற்றவர்கள் இன்று சுயநலமாக நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். சிலிண்டர் சின்னம் வாக்குச் சீட்டில் கடையிலிருந்து மூன்றாவதாக காணப்படுவதால் இலகுவாக அடையாளம் கண்டு புள்ளடியிடுவது சுலபமானது.” என தெரிவித்துளளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )