நாளை 12 மணிநேர நீர் வெட்டு !

நாளை 12 மணிநேர நீர் வெட்டு !

களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு நாளை (11) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (11) காலை 9.00 முதல் இரவு 9.00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேலிகொடை  நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள்,  பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான, மினுவாங்கொடை  மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சாரம் இடைநிறுத்தப்படுவதால் நீர் வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )