1700/- சம்பளத்தை வழங்க கம்பனிகள் இணக்கம் – ஜனாதிபதி

1700/- சம்பளத்தை வழங்க கம்பனிகள் இணக்கம் – ஜனாதிபதி

7 பெருந்தோட்ட கம்பனிகள் 1700 ரூபாய் வேதனத்தை வழங்க இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் திங்கட் கிழமை சம்பளச் சபையை கூட்டி இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், தேவைப்பட்டால் தீர்மானத்தை அமுல்ப்படுத்த விசேட சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )