யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரையின் விவகாரம்
யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று அதிகாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விகாரையை திறந்து வைப்பதற்காக தென்னிலங்கையிலிருந்து அதிகளவில் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரி மூன்றவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், அப்பகுதியில் பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.