சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் டெங்கு!
டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுவர் நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் தெரிவித்தார்.
அண்மைய நாட்களாக அதிகளவிலான டெங்கு தோற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், தாங்கள் வசிக்கும் இடம், சூழல் சுத்தம் தொடர்பில் பொது மக்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர்.