சிக்கினார் தம்புள்ளை முன்னாள் மேயரின் சகோதரர்
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் மேயரின் சகோதரரை எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஒருவரின் சகோதரர் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் முறைப்பாடு செய்திருந்தது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) அறிவுறுத்தலின் பேரில், தம்புள்ளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரைக் காவலில் எடுப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அவரது வீடு மற்றும் பணியிடத்திற்குச் சென்றிருந்த போதிலும், அவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
எவ்வாறாயினும், சந்தேகநபர் திங்கட்கிழமை (மே 29) பொலிஸில் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தம்புள்ளை மாநகர சபையில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.