ஊழல் மோசடிக்கு எதிரான சட்ட மூலம் அவசியம் [VIDEO]

peoplenews lka

ஊழல் மோசடிக்கு எதிரான சட்ட மூலம் அவசியம் [VIDEO]

ஊழல் , மோசடி சட்ட மூலம் அரசாங்கத்துக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது. எனவே இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார் .

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (11-06-2023) ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில், 


நாடு விரைவில் அபிவிருத்தியடைய வேண்டுமெனில் ஊழல் , மோசடிக்கு எதிரான சட்ட மூலம் அவசியமாகும். இது தொடர்பான சட்ட மூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அது அரசாங்கத்துக்கு சார்பாகவே தயாரிக்கப்படவுள்ளது.


உண்மையில் நாட்டில் ஊழல் மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில் ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு சமாந்தரமான சட்ட மூலம் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான சட்டமே பலம் மிக்கதாகக் காணப்படும். அத்தோடு பொலிஸாரால் மாத்திரம் ஊழல் , மோடிசக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. எனவே இது தொடர்பான நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.


மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு மோசடி செய்யப்படும் தொகைக்கு சமாந்தரமான தண்டப்பணம் அறவிடப்பட வேண்டும் என்பதோடு , 10 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட வேண்டும். முறையான சட்ட மூலம், அறிமுகப்படுத்தப்பட்டு அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More