பத்தரமுல்ல கொலை முயற்சி சம்பவம் என்ன நடந்தது [VIDEO]
பத்தரமுல்ல கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் தலைவரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.
மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில்,
இந்த சம்பவம் தொடர்பில் செயல் பட்டவர் மாத்தறை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது ,
மாத்தறை மாநகர சபையின் முன்னாள் தலைவரின் நிதி மோசடிகள் வெளிப்பட்டதன் காரணமாகவே
பத்தரமுல்ல கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் தலைவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அதிரடியாக களத்தில் இறங்கிய பொலீசார் 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்,
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்,
பஸ் ஒன்றின் உரிமையாளர் மற்றும் பஸ் நடத்துனர் ஆகியோர் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.