‘சிலிண்டர்’ சின்னம் ஜனாதிபதிக்கு கிடைத்த இறைவனின் ஆசீர்வாதம் !

‘சிலிண்டர்’ சின்னம் ஜனாதிபதிக்கு கிடைத்த இறைவனின் ஆசீர்வாதம் !

சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும். மக்களின் இதயத்தைத் தொடக்கூடிய இந்த சின்னம்,நிச்சயமாக ரணிலை வெற்றிபெறச்செய்யும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூமாரசிங்க தெரிவித்தார்.

இது தொடபிள் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக வரிசையில் இருந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்று, எரிவாயு பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக் கொடுத்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்த மகத்தான பணிக்கு இறைவனின் ஆசிர்வாதமாகவே அவருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருக்கிறது.

சமையல் எரிவாயு வரிசையின் நினைவுகளுடன் சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச்செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முக்கியமாகும்.

ரணில் இல்லை என்றால் சமையல் எரிவாயு இல்லை. அந்தளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மக்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

எனவே ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்தில் எவ்வாறு சமையல் எரிவாயு வரிசை உள்ளிட்ட ஏனைய வரிசை யுகத்துக்கு தீர்வு கண்டாரோ அதேபோன்று மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார சுமைக்கும் தீர்வுகாண்பார்.

அதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒருசில வேலைத்திட்டங்கள் தற்போதும் நடைமுறைப்
படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் பயனாகவே அஸ்வெசும போன்ற நிவாரண திட்டங்களை வழங்கி வருகிறோம். அதனால் மக்களுக்கு சமையல் எரிவாயு இல்லாமல் முடியாது.

அதேபோன்று ரணில் இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை மக்கள் தேர்தலில் காட்டுவார்கள்’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூமாரசிங்க தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )