தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்தார் இராமன் கோபால்

தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்தார் இராமன் கோபால்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இராமன் கோபால் உட்பட சிலர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இன்று (18) இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தை நேரில் சந்தித்து இணைந்துக் கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ராமன் கோபாலுக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாகவே அவர் இவ்வாறு திகாம்பரத்துடன் சங்கமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )