மன்னார் சிந்துஜாவின் கணவர் உயிர்மாய்ப்பு

மன்னார் சிந்துஜாவின் கணவர் உயிர்மாய்ப்பு

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவரான எஸ்.சுதன் (26 வயது) அவரது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில்   தவறான முடிவெடுத்து, சனிக்கிழமை (24) இரவு  உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது…

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்திருந்தார்.

இந்நிலையில், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )