இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்

ஸ்ரீபுரவில் கடந்த 16ஆம் திகதி நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டபோதிலும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்று தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சந்தேக நபர், அவிசாவளையை வசிப்பிடமாகவும், 850220751V மற்றும் 198502200751 என்ற தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பவருமான கண்டே லேகம்லகே கயான் சுகததாச என்பராவார்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071- 8591181 அல்லது 025- 2255062 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு உதவி கோரப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )