வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் கைதானவர் 46 வயதான வீட்டின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைதான சந்தேக நபர் 8 அடி 700 சென்றி மீற்றர் நீளமான கஞ்சா செடியினை தனது வீட்டில் வளர்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )