தாய்வானில்  சக்திவாய்ந்த நில அதிர்வு !

தாய்வானில் சக்திவாய்ந்த நில அதிர்வு !

தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வொன்று நேற்று மாலை பதிவாகியுள்ளது.

ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.8 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என சீன நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தாய்வானில் கடந்த மாத ஆரம்பத்தில் 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 1,000ற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )