வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கான திகதி அறிவிப்பு

வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கான திகதி அறிவிப்பு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு சுமார் 8000 பேரை பணியில் அமர்த்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 02 ஆம் திகதி காலையிலிருந்து தபால் ஊழியர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று வாக்காளர் அட்டை அடங்கிய பொதிகளை உரிய முகவரிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்கு தபால் திணைக்களத்திற்கு உரித்தான வாகனங்களும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன. விசேட பாதுகாப்புடன் வாக்காளர் அட்டை கொண்டு செல்லப்படவுள்ளன.

மேலும் அவர், எதிர்வரும் 03 ஆம் திகதியிலிருந்து உரிய தபால் அலுவலகங்கள் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )