முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மீது குற்றம் சுமத்திய முஜிபுர் ரஹ்மான்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மீது குற்றம் சுமத்திய முஜிபுர் ரஹ்மான்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐந்து வருடங்களாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அஸ்லம் என்ற நபரும் சென்றுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சந்தேக நபரை மற்றொரு நபருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய முஜிபுர் ரஹ்மான், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க
உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வொன்றிலேயே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )