குவைத்தில் 24 இலங்கையர்கள் கைது !

குவைத்தில் 24 இலங்கையர்கள் கைது !

குவைத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்த ‘எதேரா அபி’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிகழ்வை அனுமதியின்றி நடத்தியமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் இக்குழுவினரை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )