பங்களாதேஷ் கலவரத்தில் 32 குழந்தைகள் உயிரிழப்பு !

பங்களாதேஷ் கலவரத்தில் 32 குழந்தைகள் உயிரிழப்பு !

பங்களாதேஷில் அண்மையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 32 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டம் இடம்பெற்ற இடங்களை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த குழந்தைகள் ஐந்து வயது நிரம்பாதவர்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற போராட்டங்களில் 266 பேர் உயிரிழந்ததோடு, 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )