வீட்டுக்குள் புகுந்து தாக்கிய வன்முறை கும்பல்

வீட்டுக்குள் புகுந்து தாக்கிய வன்முறை கும்பல்

யாழ். வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியில் நேற்று முன்தினம் (04) இரவு வீடுக்குள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண்ணொருவர் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.

அந்தவகையில், விரைந்து செயற்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டினை பார்வையிட்டனர்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ஏனைய ஐவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )