மியன்மார் முகாமிலிருந்து நாடு  திரும்பிய 20 இலங்கையர்கள்

மியன்மார் முகாமிலிருந்து நாடு திரும்பிய 20 இலங்கையர்கள்

மியன்மாரில் உள்ள சைபர் மோசடி முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 20 இலங்கையர்கள் நேற்று (05) மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். 

இந்த 20 இலங்கையர்களில் 16 ஆண்களும் 04 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் நேற்று (05) இரவு 11.09 மணியளவில் தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில்,மேலும் 28 இலங்கையர்கள் மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் முகாம்களில் 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )