கடவுச்சீட்டு வரிசையின் பின்னால் பெரும் மாபியா

கடவுச்சீட்டு வரிசையின் பின்னால் பெரும் மாபியா

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னால் மாபியாவொன்று செயற்பட்டு வருவதாக, பொது பாதுகாப்புஅமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இல்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடவுச்சீட்டு இல்லாததால் மாத்திரம் வரிசை ஏற்படவில்லை. அரசாங்கம் ஒன்லைன் சந்திப்புக்களை முதலில் ஆரம்பித்த நிலையில் சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்தன. பின்னர் அவை சிலரால் 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக அறியக்கிடைத்தது. இதனை அறிந்து ஒன்லைன் சந்திப்பை உடனே நிறுத்த நடவடிக்கை எடுத்தோம்.

பின்னர் வரிசையில் வரும்படி கூறினோம். அப்போது வரிசையிலும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்கப்பட்டுள்ளது. அதன் பின்தான் பொலிஸாருக்கு இதனை பொறுப்பேற்க கூறினோம்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )