பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்.

இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று (17) மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. 

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்.

சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு ‘கைதி கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )