3 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

3 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார், தள்ளாடி  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவமானது நேற்று (24) மாலை மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள மூன்றாம் பிட்டி பகுதியில் இடம்பெற்றது.

குறித்த  நபர் விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட  3 கிலோ 570 கிராம் கேரள கஞ்சாவுடன் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.  

குறித்த சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )