அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய வேலைத்திட்டம்

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய வேலைத்திட்டம்

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து கண்டறிய நிறுவன ரீதியாக குழுக்கள் நியமிக்கப்படுவதில்லை. அதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.

மற்றுமொரு முக்கிய விடயம் இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் கடமைகளின் போது நிகழும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டு அமைச்சிடம் முறையானதொரு திட்டம் இல்லை.

எனவே, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்த சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நான் தெரிவித்துள்ளேன்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )