வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி களனி கங்கை, களுகங்கை, நில்வளா கங்கை, தெதுறு ஓயா மற்றும் அத்தனுகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து தெதுறு ஓயா மற்றும் களு கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )