திமிங்கல எச்சங்களுடன் மீனவர்கள் இருவர் கைது

திமிங்கல எச்சங்களுடன் மீனவர்கள் இருவர் கைது

கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான 23 கிலோ கிராம் நிறையுடைய திமிங்கலத்தின் எச்சங்களுடன் இரண்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த மீனவர்கள் இருவரும் இன்று (29) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

குறித்த மீனவர்கள் கடலில் மிதந்த திமிங்கல எச்சத்தை இரகசியமான முறையில் எடுத்துச் சென்றமை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.  அவர்களிடமிருந்த திமிங்கல எச்சத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )