சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடர்மாடி கட்டிடத்தினை புனரமைக்க கலாநிதி.வி.ஜனகன் நிதியுதவி

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடர்மாடி கட்டிடத்தினை புனரமைக்க கலாநிதி.வி.ஜனகன் நிதியுதவி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மொரட்டுவ சொய்சாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள சீ தொகுதி தொடர்மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்த நிலையில் அங்கு வசிக்கும் 64 குடும்பங்கள்
பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த விடயமானது ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் (01) களவிஜயம் செய்த
கலாநிதி ஜனகன் அவர்கள் கட்டிடத்தில் சேதம் அடைந்த பகுதியை பார்வையிட்டார்.

குறித்த கட்டிடத்தின் பாதுகாப்பற்ற நிலையை அவதானித்த அவர்
அதனை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கான நிதி உதவியினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )