நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானம்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானம்

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்துக்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குறித்த மனுக்களை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா உட்பட பல தரப்பினர் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )